அயோத்தி வழக்கின் மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி.!

அயோத்தி வழக்கின் மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி.!

Share it if you like it

அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மறுசீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. அயோத்தி வழக்கின் சீராய்வு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் பாப்டே தலைமையிலான அமர்வு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த மாதம் 9 ஆம் தேதி அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்த இடத்தில  ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து நிர்மோகி அகாரா, சன்னி வக்பு வாரியம் உட்பட 18 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த நீதிமன்ற அமர்வு இதனை விசாரிக்க எந்தவித முகாந்திரமும் இல்லை எனக்கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


Share it if you like it