அயோத்தி விவகாரம் 3 அதிகாரிகள் குழு -உள்துறை அமைச்சகம்!

அயோத்தி விவகாரம் 3 அதிகாரிகள் குழு -உள்துறை அமைச்சகம்!

Share it if you like it

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு சாதகமான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு கடந்த நவம்பர் மாதம் 9-ந்தேதி வழங்கியது. சன்னி வக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும், ராமர் கோவில் கட்டுவதற்காக ஒரு அறக்கட்டளையை அமைக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.
அயோத்தி பிரச்சினை தொடர்பாக பல்வேறு பரிந்துரைகள், ஆலோசனைகள் வருவதால் உள்துறை அமைச்சகம் இதனை கவனிப்பதற்காக ஒரு அதிகாரிகள் குழுவை நியமித்துள்ளது.

அயோத்தி விவகாரங்கள், அதுதொடர்பான கோர்ட்டு தீர்ப்புகள் ஆகியவற்றை கவனிக்க கூடுதல் செயலாளர் ஜியானேஷ் குமார் தலைமையில் 3 அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். இதுதொடர்பான அனைத்து விவகாரங்களையும் இனி அவர்களே கவனிப்பார்கள் என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.


Share it if you like it