ஆதாரம் இருந்தால் நிரூபியுங்கள், இல்லையென்றால் சட்ட நடவடிக்கைக்கு தயாராக இருங்கள் – நாட்டுப்புற பாடகி மாலினி அவஸ்தி !

ஆதாரம் இருந்தால் நிரூபியுங்கள், இல்லையென்றால் சட்ட நடவடிக்கைக்கு தயாராக இருங்கள் – நாட்டுப்புற பாடகி மாலினி அவஸ்தி !

Share it if you like it

  • உபி மாநிலத்தை சேர்ந்த புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகி மாலினி அவஸ்தி மற்றும் அவரது கணவர் அவனிஷ் குமார் அவஸ்தி ஆகியோருக்கு எதிராக காங்கிரஸ் ஐடி செல் ஊழியரான கவுரவ் பாந்தி சமூக வலைத்தளத்தில் தவறாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த அவனிஷ் குமார் அவஸ்தி தற்போது மாநிலத்தின் கொரோனா வைரஸ் நெருக்கடியை நிர்வகிக்கும் உ.பி. கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகவும் உள்ளார்.
  • ஏழை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக பாஜகவின் ஷாகாபாய் போல மாலினி அவஸ்தியின் கணவர் அவனிஷ் குமார் அவஸ்தி நடந்து கொள்கிறார். அவரது மனைவி மாலினி அவஸ்தி உ.பி. அரசுக்கு நூற்றுக்கணக்கான
    நிகழ்ச்சிகளைச் செய்கிறார், எனவே பாஜக அரசிடமிருந்து கோடி கோடியாக சம்பாதிக்கிறார். இவ்வாறு ட்விட்டரில் கவுரவ் பாந்தி பதிவிட்டிருந்தார். இந்த பதிவை கண்ட மாலினி அவஸ்தி கவுரவ் பாந்திக்கு உங்களால் முடிந்தால் ஆதாரத்துடன் நிரூபியுங்கள் இல்லையென்றால் சட்டபூர்வமான நடவடிக்கைக்கு தயாராக இருங்கள் என்று எச்சரித்தார்.
  • இந்நிலையில் தன் கணவரை ‘பாஜக ஷாகபாய்’ என்று அழைத்ததைத் தொடர்ந்து நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கவுரவ் பாந்திக்கு அவதூறு அறிக்கை [defamation notice] ஒன்றை அனுப்பியுள்ளார்.


Share it if you like it