விமானத்தில் பயணம் செய்ய  ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் – விமான நிலைய ஆணையம் !

விமானத்தில் பயணம் செய்ய ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் – விமான நிலைய ஆணையம் !

Share it if you like it

  • கொரோனா நோய் தொற்றினால் மத்திய அரசு ஊரடங்கை அறிவித்தது. ஊரடங்கினால் சாலை, மெட்ரோ மற்றும் விமான போக்குவரத்து சேவையை தடை செய்தது. தற்போது மத்திய அரசின் முயற்சியால் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்துகொண்டு வருகிறது. இதனையொட்டி கேரளா மற்றும் கர்நாடகா மாநில அரசு சாலை போக்குவரத்துக்கு வசதியை தொடங்கி உள்ளது.
  • இந்நிலையில் உள்நாட்டு விமான போக்குவரத்து வரும் 25 ஆம் தேதியன்று தொடங்கப்பட உள்ள நிலையில், விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் அலைபேசியில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் என்று விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. விமான நுழைவு வாயிலில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையும், விமான நிலைய ஊழியர்களும் இதனை உறுதிப்படுத்த வேண்டும் என விமான நிலைய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Share it if you like it