இஸ்லாமுக்காக இந்தியாவை விட்டு ஐ.எஸ்.ஐ.எஸ்ல் சேர்ந்த ஆயிஷா – ஏமாற்றிவிட்டதாக ஆப்கானில் அலறல்!

இஸ்லாமுக்காக இந்தியாவை விட்டு ஐ.எஸ்.ஐ.எஸ்ல் சேர்ந்த ஆயிஷா – ஏமாற்றிவிட்டதாக ஆப்கானில் அலறல்!

Share it if you like it

உலக அமைதிக்கே கடும் அச்சுறுத்தலாகவும், பல அப்பாவி மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பெருத்த சேதத்தை, உருவாக்கிய ஒரு அமைப்பு உலகில், உள்ளது என்றால் அது ஜ.எஸ்.ஜ.எஸ் என்பதில், யாருக்கும் மாற்று, கருத்து இருக்க முடியாது. இவர்களின் அட்டுழியங்களை, வல்லரசு நாடுகள் அடக்கி வரும், அதே வேளையில் ஜ.எஸ்.ஜ.எஸ் குழு உலகம் முழுவதும், ஆட்களை சேர்த்து வருகிறது. இந்தியாவில் இருந்து சிலர் இந்த அமைப்பில், இணைந்தவர்களை மத்திய அரசு, மீட்டு தாயகம் அழைத்து வந்துள்ளது.

ஆனால் சிலரின் நிலை என்னவென்றே, அறிய முடியாத சூழ்நிலை உள்ளது. காபூல் சிறையில் தான் வாடுவதாக கேரளாவை, சேர்ந்த ஒரு பெண்ணின் வீடியோ, ஒன்று சமூக வலைத்தளங்களில், வேகமாக பரவி வருகிறது. அதில் அப்பெண் இவ்வாறு கூறியுள்ளார். என் பெயர் ஆயிஷா, எனது கணவர் பெயர் அப்துல் ரஷீத் அப்துல்லா, நாங்கள் ’ஷரியா’ மார்க்க நெறிமுறைகளை, தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையுடன், கேரளாவில் இருந்து 2016ம் ஆண்டு ஆப்கன் வந்து. ஜ.எஸ்.ஜ.எஸ் பயங்கரவாத குழுவில் எங்களை இணைத்துக் கொண்டோம்.

நாங்கள் இங்கு வந்து பார்க்கும் பொழுது, நிலைமை மிக கொடுரமாக இருந்தது.  மக்கள் நிம்மதியாக கூட ,மசூதிகளில் தொழ கூட முடியாத, அவலநிலை நிலவுவதாக வேதனையுடன் கூறியுள்ளார். ஒழுக்கமான மார்க்கத்திற்கு வழி, கிடைக்கும் என நானும் எனது கணவரும், இக்குழுவில் இணைந்தோம்.

ஆனால் எங்களுக்கு இது மிகப்பெரிய, ஏமாற்றம் அளிக்கிறது. மீண்டும் இந்தியா வந்து என் கணவரின், குடும்பத்தாருடன் வசிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் மற்றொரு பயங்கரவாதி பெண்ணான பாத்திமா தானும் இந்தியா திரும்ப வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

கொரோனா ஒழியும் வரை பதுங்கி இருங்கள் தீவிரவாதிகளுக்கு ISIS தலைமை திறந்த மடல்!

 


Share it if you like it