உயிர்போகும் நிலையிலும் ஊழல் செய்யும் பினராயி விஜயனின் கம்யூனிஸ்ட் அரசு !

உயிர்போகும் நிலையிலும் ஊழல் செய்யும் பினராயி விஜயனின் கம்யூனிஸ்ட் அரசு !

Share it if you like it

சீன கொரோனா வைரசால் பாதித்த நபர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் அமெரிக்க நிறுவனம் ஸ்பிரிங்க்ளருக்கு (Sprinklr) வழங்கியதில் பெரும் ஊழல் நடந்திருக்கிறது என்று கேரள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அரசான பினராயி விஜயன் மீது குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் ரேஷன் கார்டு பதிவேட்டில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரங்கள் கூட ஸ்ப்ரிங்க்ளர் நிறுவனத்திற்கு தாரை வார்த்துள்ளது என்று கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றம் சாட்டுகிறார்.

கொரோனா வைரசால் மக்கள் கொத்து கொத்தாக இறக்கும் நிலையில் கூட பினராயி விஜயன் அரசு ஊழல் செய்கிறது. எனவே ஊழல் செய்யும் பினராயி விஜயன் அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேரள காங்கிரஸ் தலைவர்கள் வலுவாக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.


Share it if you like it