கனிமொழி  குற்றச்சாட்டிற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ‘நச்’ பதில்…!

கனிமொழி குற்றச்சாட்டிற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ‘நச்’ பதில்…!

Share it if you like it

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், ஊடகங்கள், பத்திரிக்கைகள், மாணவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் ஊக்கப்படுத்தாமல். தவறான முடிவு எடுத்த மாணவர்களின் மரணத்தை வைத்து. இன்று வரை அரசியல் செய்வது வெட்க கேடான அரசியல் என்று வெளிப்படையாகவே திமுகவை மக்கள் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில்.

திமுகவின் மூத்த தலைவர் திருமதி. கனிமொழி நீட் குறித்து தெரிவித்த கருத்திற்கு பாஜக மூத்த தலைவரும் செய்தித் தொடர்பாளருமான திரு. நாராயணன் திருப்பதி தக்க பதிலடியை கனிமொழிக்கு இவ்வாறு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீட்டின் காரணமாக நடைபெறும் மரணங்கள் தற்கொலைகள் அல்ல. மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கொலைகளே’- கனிமொழி.!

10ம் வகுப்பு மற்றும் 12வது வகுப்பு தேர்வுக்கு பயந்து பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட போதெல்லாம் அந்த தேர்வு முறையை ரத்து செய்ய, தி மு க குரல், கொடுக்கவில்லையே ஏன்? அப்படியானால் அந்த கொலைகளை நடத்தியது தி மு க வா? நீட்டினால் தமிழக அரசியல்வாதிகள் சிலர் நடத்தும் கல்வி கொள்ளைக்கு துணை போகிறது தி மு க. பணம் படைத்தவர்களுக்கு துணை நிற்கிறது தி மு க


Share it if you like it