கொரோனாவிற்கு மருந்து ரெடி…! ஆதாரங்களை வெளியிட உள்ளோம்..! பதஞ்சலி அதிரடி அறிவிப்பு…!

கொரோனாவிற்கு மருந்து ரெடி…! ஆதாரங்களை வெளியிட உள்ளோம்..! பதஞ்சலி அதிரடி அறிவிப்பு…!

Share it if you like it

அண்மையில் பாஜக. எம்.பி தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியிருந்தார்.

கொரோனாவிற்கு சிகிச்சையளிக்க இந்திய மருந்துகளைப் பயன்படுத்துவது நல்ல முயற்சி! இந்த தொற்று நோய்க்கு ஒரு நல்ல வழியைக் கண்டுபிடிப்பதில் சித்த மருத்துவம் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்ற சிறந்த மருத்துவப் பொக்கிஷங்களுக்கு தமிழ்நாடு வீடாக உள்ளது, இந்த மாபெரும் வெற்றிக்கு சித்தா டாக்டர்களை வாழ்த்துகிறேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் கொரோனா தொற்றை ஒழிப்பதில் பதஞ்சலி நிறுவனம் மருந்து கண்டு பிடித்து விட்டது என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா தனது அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.

நூறு நோயாளிகளுக்கு எங்கள் மருந்தை வழங்கினோம். அவர்கள் அனைவரும் பரி பூரணமாக குணம் பெற்றுள்ளனர். கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து எங்கள் நிறுவனத்தின் சார்பில், தனி விஞ்ஞானிகள் குழுவை கொண்டு பல்வேறு, கட்ட ஆய்வு பணிகளை மேற்கொண்டோம்.

கொரோனா நோயாளிகளுக்கு எங்கள் மருந்தை, வழங்கி ஆய்வு மேற்கொண்ட பொழுது. அவர்கள் அனைவரும் 5 முதல் 14 நாட்களில் 100% குணம் அடைந்ததை அறிந்தோம். இன்னும் சில தினங்களில் எங்களிடம் உள்ள ஆதாரங்களை வெளியிடுவோம் என்று பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்தாக தற்பொழுது தமிழகம் முழுவதும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில். பதஞ்சலி அறிவிப்பு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it