R.S.S – H.S.S நடத்திய ரத்ததான இணையதள நிகழ்ச்சியில்..! நடிகர் சாந்தனு பாக்யராஜ் பங்கேற்பு..!

R.S.S – H.S.S நடத்திய ரத்ததான இணையதள நிகழ்ச்சியில்..! நடிகர் சாந்தனு பாக்யராஜ் பங்கேற்பு..!

Share it if you like it

R.S.S -H.S.S ரத்த தான இயக்கம  நேற்று வெப் எக்ஸ் செயலி மூலம் நடத்திய ரத்த தான கொடையாளிகள் சந்திப்பில் சிறப்பு விருந்தினராக நடிகர் சாந்தனு பாக்யராஜ் அவர்கள் கலந்து கொண்டு இவ்வாறு கூறியுள்ளார ”இந்த உலகத்தில் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த இயக்கமும் உதாரணமாக இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  இந்த செயலி அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இன்று இந்த இயக்கமும் இச்செயலியும் மிகவும் வளர்ந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது”

மேலும் இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் மாநில இணை செயலாளர் மற்றும் H.S.S நிர்வாக அறங்காவலர் திரு. ராமகிருஷ்ண பிரசாத் அவர்களின் சிறப்புரையாற்றினார்.  அதில் அவர் “ இவ்வுலகில் பசுவை, மரங்களை, இயற்கையை, என அனைத்தையும் இறைவனாக  வணங்கும் பழக்கம் கொண்டது நமது பாரத பண்பாடு ஏன்னென்றால் இவை அனைத்தும் மற்றவர்களுக்கு நன்மையை கொடுத்து கொண்டே இருப்பார்கள். அதே போல் ஒவ்வொரு மனிதனும் பிறருக்கு ரத்த தானம் கொடுக்க  முன் வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஆர்.எ ஸ்.எஸ் மூத்த நிர்வாகி சிவராம் ஜீ

R.S.S – H.S.S ரத்த தான இயக்கம் 1980-ல் ஆர்.எ ஸ்.எஸ் மூத்த நிர்வாகியான சிவராம் ஜீ அவர்களால் துவங்கப்பட்டது. பின்னர் உத்தம ராஜ் என்னும் ஆர்.எஸ்.எஸ் முழு நேர ஊழியரால் தொடர்ந்து நடத்தப்பட்டது. 2017-ம் ஆண்டு இவ்வியக்கம் மொபைல் செயலி சேவையை துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்  நிகழ்ச்சியில் H.S.S அமைப்பின் நிர்வாக அறங்காவலர் எம்.கே.ஆர். மோகன், மற்றும் ராகவன் அவர்களும். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மாநில அமைப்பாளர் பூ.மு. ரவிக்குமார் அவர்களும் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்துள்ளனர்

 


Share it if you like it