கொரோனா தற்காப்பு நடவடிக்கைகளில் உலகிற்கு இந்தியா ஒரு முன்மாதிரியாக விளங்கியுள்ளது – பிரதமர் மோடி  !

கொரோனா தற்காப்பு நடவடிக்கைகளில் உலகிற்கு இந்தியா ஒரு முன்மாதிரியாக விளங்கியுள்ளது – பிரதமர் மோடி !

Share it if you like it

  • சற்றுமுன் பிரதமர் மோடி அவர் பேசிய காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில், ஊரடங்கின் 10 ஆவது நாளை வெற்றிகரமாக எட்டியுள்ளோம். இதில் மக்களுக்கு பெரும்பங்கு உள்ளது. சிறந்த முறையில் ஒத்துழைப்பு வழங்கிவரும் மக்களுக்கு நன்றி.
  • நாம் தனித்து இருக்கிறோமே ஒழிய தனியாக இல்லை.
  • கொரோனா தற்காப்பு நடவடிக்கைகளில் உலகிற்கு இந்தியா ஒரு முன்மாதிரியாக விளங்கியுள்ளது.
  • கொரோனாவை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து போராட வேண்டும்
  • வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9மணிக்கு 9 நிமிடங்கள் செல்போனில் டார்ச் வெளிச்சத்தைக் காட்டுங்கள்.
  • நாம் தனி ஆட்கள் இல்லை 130 கோடி மக்களுடன் இணைந்துள்ளோம்
  • நெருக்கடியான நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்தது பாராட்டத்தக்கது.
  • கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி ஒளிமயமான காலத்தை கொண்டு வர வேண்டும்.
  • கொரோனா வைரசை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும்
  • வீட்டில் இருக்கும் அனைவரும் இறைவனின் வடிவம்.
  • தொடர்ந்து மக்கள் ஒத்துழைப்பு அளியுங்கள், நன்றி. இவ்வாறு அந்த காணொளியில் பேசியுள்ளார்.

Share it if you like it