கொல்கத்தா துறைமுகத்திற்கு  முகர்ஜியின் பெயர் சூட்டப்படும்

கொல்கத்தா துறைமுகத்திற்கு முகர்ஜியின் பெயர் சூட்டப்படும்

Share it if you like it

கொல்கத்தா துறைமுகக் கழகத்தின் 150 ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக கொல்கத்தா சென்றுள்ள பிரதமர் மோடி, கொல்கத்தா துறைமுகம் இந்திய நாட்டின் தொழில், ஆன்மிகம் மற்றும் தன்னிறைவு ஆகியவற்றின் அடையாளமாக திகழ்வதாக குறிப்பிட்டார். இந்த துறைமுகத்தை நவீன இந்தியாவின் அடையாளமாக மாற்றுவது நமது கடமை என்று அவர் கூறினார்.மேலும், கொல்கத்தா துறைமுகத்திற்கு மேற்கு வங்கத்தை சேர்ந்த கல்வியாளரும், பாரதீய ஜனசங்கத்தை, தோற்றுவித்தவருமான ஷியாம் பிரசாத் முகர்ஜியின் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.


Share it if you like it