கோவையில்  ஹிந்து முன்னணியினரை தாக்கிய பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்ய வேண்டும் – பாஜக மாநில தலைவர் முருகன் !

கோவையில் ஹிந்து முன்னணியினரை தாக்கிய பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்ய வேண்டும் – பாஜக மாநில தலைவர் முருகன் !

Share it if you like it

பாஜகவின் மாநில தலைவர் L.முருகன் நேற்று விமானம் மூலமாக கோவை சென்றார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு பாஜக அலுவலகம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்றார்.

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக பல வன்கொடுமைகள் நிகழ்ந்தவாறு உள்ளன. சமீபத்தில் கோவையில் ஹிந்து இயக்கங்களை சேர்ந்த ஆனந்த் மற்றும் சூர்ய பிரகாஷ் ஆகியோர் மீது  பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதில் ஆனந்த் தாக்கப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் சூர்யா பிரகாஷ் தாக்கப்பட்ட வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. போலீசார் உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் இதுபோன்ற பயங்கரவாதிகளுக்கு தயவு தாட்சண்யம் இன்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் L.முருகன் கூறினார்.


Share it if you like it