சட்டம் தன் கடமையை செய்யும்- கேரள காவல்துறை அசத்தல்!

சட்டம் தன் கடமையை செய்யும்- கேரள காவல்துறை அசத்தல்!

Share it if you like it

கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த பழையனூர்  காவல்  நிலையத்திற்கு சுதீஷ் என்பவரது மகன் அதுல் (10) என்னும் சிறுவன்  புகார் ஒன்றை கூறியுள்ளான். அப்புகாரில்  என்னுடைய கால்பந்து காணாமல் போய் விட்டது அதனை உடனே கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளான்.

உனக்கு புது கால்பந்து வாங்கி தருகிறோம் அதனை மறந்து விடுமாறு அதுல்லிடம் பெற்றோர்  சமாதானம் கூறியுள்ளனர். ஆனால் அவனோ தன் பெற்றோரின் சொல் பேச்சையும் மீறி பிடிவாதத்தில் உறுதியாக இருந்தான்.  இதனை அடுத்து  எஸ்.ஜ. பிரதீப் குமார் தலைமையில் போலீசார் அப்பகுதியில் உள்ள இளைஞர்களிடம் இருந்து கால்பந்தை மீட்டு  அதுல்லிடம் வழங்கி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it