சீன அதிபர் ஜின்பிங் வெளியிட்ட அறிக்கை..! வறுத்தெடுத்த ஹர்பஜன் சிங்…!

சீன அதிபர் ஜின்பிங் வெளியிட்ட அறிக்கை..! வறுத்தெடுத்த ஹர்பஜன் சிங்…!

Share it if you like it

உலகமே இன்று ரத்த கண்ணீர் வடித்து வருவதற்கு சீனாவே காரணம் என்று உலக நாடுகள் அனைத்தும் அந்நாட்டின் மீது கடுமையான கோபத்தில் உள்ளது.  அண்மையில் சீன அதிபர் உலக நாடுகளுக்கு தனது கருத்தினை இவ்வாறு அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்று பரவிய சமயத்தில், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்ற உறுதியான முயற்சிகளை தங்கள் நாடு மேற்கொண்டதாகவும், சீனா வெளிப்படையான முறையில் செயல்பட்டதாகவும் சீன அதிபர் தெரிவித்து இருந்தார்.

இதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது கடும் எதிர்ப்பை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.

நோய் தொற்று பரவி உலகமே அவதிப்பட்டு கொண்டு இருக்கும் சமயத்தில். நீங்கள் இதை வெளிப்படையாகவே தான் பார்த்துக் கொண்டு இருந்தீர்கள் சீனா. என்று தனது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it