டிக் டிக் டிக் – திக் திக் திக்

டிக் டிக் டிக் – திக் திக் திக்

Share it if you like it

மங்களூரு விமான நிலையத்தில் நேற்று காலை 10.30 மணி அளவில் கேட்பாரற்று கிடந்த பை கண்டறியப்பட்டது. வெடிகுண்டு பீதி ஏற்பட்டதால் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து அந்த பையை சோதனையிட்டனர். சோதனையில் அந்த பையில் 3 வெடி குண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

உடனே விமான நிலையத்திற்கு வந்திருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் உயர் போலீஸ் அதிகாரிகளும், வெடிகுண்டு செயலிழப்பு குழுவினரும் அங்கு விரைந்து வந்து வெடிகுண்டுகளை பத்திரமாக எடுத்துச் சென்று மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து வெடித்து செயலிழக்க வைத்தனர்.


Share it if you like it