மன்னிப்பா! நானா ! NEVER ! – ரஜினிகாந்த்

மன்னிப்பா! நானா ! NEVER ! – ரஜினிகாந்த்

Share it if you like it

சென்னையில் கடந்த வாரம் துக்ளக் இதழின் 50வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், பெரியாரை கடுமையாக எதிர்த்தவர் சோ. இந்துக் கடவுள்களுக்கு எதிராக பெரியார் பேரணி நடத்தினார்.இதுபற்றி யாருமே எழுதாத சூழலில் துக்ளக் இதழில் சோ தைரியமாக எழுதியதாக குறிப்பிட்டார்.

இதையடுத்து திராவிடர் விடுதலை கழகம், பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் ரஜினி மீது போலீசில் புகார் அளித்தன. ரஜினிக்கு எதிராக போராட்டம் நடத்தவும், ரஜினி வீட்டை முற்றுகையிடவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பு பத்திரிகையாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் இன்று துக்ளக் 50வது ஆண்டு விழாவில் நான் பேசிய விஷயம் சர்ச்சையாகி இருக்கிறது.
நான் கேள்விப்பட்டது, பத்திரிகைகளில் வந்ததைத் தான் நான் பேசினேன். கற்பனையாக எதுவும் கூறவில்லை. இது மறுக்கக் கூடிய சம்பவம் இல்லை. மறக்க வேண்டிய சம்பவம்.

இதற்க்கு நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். வருத்தம் தெரிவிக்க மாட்டேன் என்று தாழ்மையுடன் தெரிவித்துள்ளார்.


Share it if you like it