டீ மாஸ்டர் பக்ரூதின் பாக்கெட்டில் இருந்த பணத்தை ’அபேஸ்’ செய்து ஓட்டம் எடுத்த தி.மு.க பிரமுகர்..!

டீ மாஸ்டர் பக்ரூதின் பாக்கெட்டில் இருந்த பணத்தை ’அபேஸ்’ செய்து ஓட்டம் எடுத்த தி.மு.க பிரமுகர்..!

Share it if you like it

திமுக உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் பேயாட்டம் நாளுக்கு நாள் தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், வெறுப்பையும் சம்பாரித்து வருகிறது என்பது கசப்பான உண்மை..

பொள்ளாச்சி வடுக பாளையத்தை சேர்ந்த திமுக பிரமுகர் லிங்கதுரை மற்றும் அவரின் நண்பர்கள்… பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு கொண்டு இருந்த டீக்கடைக்கு நள்ளிரவு சென்று டீ அருந்தியுள்ளனர்..

சூடாக வடை சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று சூடாக வடை போட்டு தருமாறு டீ மாஸ்டரிடம் கேட்டுள்ளார்.. நள்ளிரவு ஆனதால் வடை சூடாக போட முடியாது என்று கூறப்பட்டுள்ளது.. இதனால் கடும் ஆத்திரம் அடைந்த திமுக நிர்வாகி டீ மாஸ்டர் பக்ரூதினிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.. அதோடுமட்டுமில்லாமல் அவரின் பாக்கெட்டில் இருந்த 9,600 பணத்தை லிங்கதுரை பிடுங்கிச் சென்றுள்ளார்..

குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் திமுக நிர்வாகிகளை கவனிக்க சிறப்பு நீதிமன்றம், சிறப்பு காவல் படை, தனி சிறைச்சாலையை, உடனே தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்..

 


Share it if you like it