டெல்லி மருத்துவர் தற்கொலையில் ஆம் ஆத்மீ எம்எல்ஏ கைது !

டெல்லி மருத்துவர் தற்கொலையில் ஆம் ஆத்மீ எம்எல்ஏ கைது !

Share it if you like it

  • டெல்லியில் டாக்டர் ராஜீந்தர் சிங் (52) என்பவர் தெற்கு டெல்லியில் உள்ள துர்காபுரி பகுதியில் ஒரு தனியார் பயிற்சியாளராக இருந்தார். மேலும் 2007 முதல் டெல்லி ஜால் போர்டு தண்ணீரை டேங்கர்கள் மூலம் வழங்குவதிலும் ஈடுபட்டிருந்தார். தண்ணீர் டேங்கர்கள் குத்தகைக்கு இவர் எடுத்திருந்தார். அதனால் இவரின் மீது கபில் நகரில் வசிக்கும் ஆம் ஆத்மீ எம்எல்ஏவான பிரகாஷ் ஜார்வாளுக்கு கருத்து வேறுபாடு இருந்தது. மேலும் அவருக்கு வழங்கக்கூடிய தொகையை பிரகாஷ் ஜார்வல் தராமல் ஏமாற்றியுள்ளார். இந்நிலையில் மனமுடைந்து ஏப்ரல் 18 அன்று டாக்டர் ராஜீந்தர் சிங் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • அவர் வீட்டில் காவல்துறையினர் தேடிய போது தற்கொலை குறிப்பு ஒன்று கிடைத்தது. அந்த குறிப்பில் எனது இறப்பிற்கு ஆம் ஆத்மீ கட்சியின் எம்எல்ஏ பிரகாஷ் நர்வால் தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் டெல்லி போலீசார் ஆம் ஆத்மீ எம்எல்ஏ பிரகாஷ் ஜார்வலை கைது செய்தனர்.

Share it if you like it