தமிழ் மன்னர்களின் புகழ் உரைத்த வெங்கையா நாயுடு

தமிழ் மன்னர்களின் புகழ் உரைத்த வெங்கையா நாயுடு

Share it if you like it

சென்னையில் நடைபெற்ற தேசிய கடல்சார் தொழில் நுட்ப கழகத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு,

முதலாம் நூற்றாண்டில் சோழர்களால் அமைக்கப்பட்ட பூம்புகார் நகரம் கடல்சார் கட்டமைப்பில் நாம் சிறந்து விளங்கியதற்கான சான்று ஆகும். அயல்நாடுகளுடனான வர்த்தகத்தில் தமிழக மன்னர்கள் சிறப்புடன் விளங்கினர் .
சுற்றுச்சூழல் கள ஆராய்ச்சியில், கடற் சார்ந்த ஆய்வுகள் முக்கியமானவை என்று தெரிவித்தார். கடல் சார்ந்த ஆய்வுகளில் தமிழகம் முன்னோடியாக திகழ்வதாகவும், சோழர்கள் மற்றும் பல்லவ மன்னர்கள் நாடு கடந்து வாணிபம் செய்து சாதனை படைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.


Share it if you like it