தாத்தா கூறிய கருத்து!

தாத்தா கூறிய கருத்து!

Share it if you like it

பேரனே! சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்.

பேரன்      : அது எப்படி தாத்தா?

முதியவர் : சூதாட்டத்திற்கு பணம் வேண்டும்.

மது அருந்த பணம் வேண்டும்.

சிகரெட் புகைக்க பணம் வேண்டும்.

பாவங்களோடு பயணிக்க பணம் வேண்டும்.

 (ஆனால் பேரனே)

   

                                                            அன்பு காட்ட பணம்  தேவையில்லை

கடவுளை வணங்க பணம் தேவையில்லை.

சேவை செய்ய பணம் தேவையில்லை.

விரதம் இருக்க பணம் தேவையில்லை.

மன்னிப்பு கோர பணம் தேவையில்லை.

நம் உரிமையை நிலைநாட்ட பணம் தேவையில்லை.

இத்தனைக்கும் மேலாக இறைவன் “நாமம்” சொல்ல வேறெதுவும் தேவையில்லை      பேரனே!

நீ பணம் கொடுத்து நரகத்தை விரும்புகிறாயா?

இலவசமான சொர்க்கத்தை நேசிக்கிறாயா?

முதியோரின் அணுகுமுறை எவ்வளவு அழகாக உள்ளது.

 


Share it if you like it