திமுக பட்டியலின மக்களை அவமானப்படுத்தியதை ஸ்டாலின் குரலாக தான் நான் பார்க்கிறேன்- பாஜக தலைவர் எல்.முருகன்!

திமுக பட்டியலின மக்களை அவமானப்படுத்தியதை ஸ்டாலின் குரலாக தான் நான் பார்க்கிறேன்- பாஜக தலைவர் எல்.முருகன்!

Share it if you like it

தலைவன் எவ்வழியோ, கட்சி தொண்டனும் அவ்வழியே என்பதற்கு ஏற்ப திமுக மீது பரவலாக மக்களின் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அக்கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர் என அவ்வபொழுது செய்தித்தாள்களில் தலைப்பு செய்தியாக வருவதை காண முடிகிறது.

அண்மையில் ஆர்.எஸ். பாரதி உரையாற்றும் பொழுது தனது மனதில் உள்ள வன்மத்தை வெளிப்படுத்தி இருந்தார்.  ஊடகம் மற்றும் பட்டியலின மக்களை பற்றி மிக கீழ்தரமாக விமர்சனம் செய்தார். அதே போன்று தயாநிதி மாறனும் நாங்கள் என்ன? இரண்டாம் தர குடிமக்களாக என்று மீண்டும் அவர்களின் உணர்வுகளை புண்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

திமுக சமூக நீதியை குழிதோண்டி புதைத்து வருகிறது. பட்டியலின மக்களை அவமானப்படுத்திய திமுக MP, MLAக்களை ஸ்டாலின் கண்டிக்கவில்லை திமுகவினர் பேசியதை ஸ்டாலின் குரலாக தான் நான் பார்க்கிறேன்.

பாஜக தலைவர் எல். முருகன் கருத்திற்கு பலரும் வரவேற்பு தெரிவித்தது மட்டுமில்லாமல், திமுகவின் செய்தி தொடர்பாளர் திருமாவின் பதிலை நாங்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறோம் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it