தேசிய ஊரடங்கு நீட்டிப்பை பற்றி இன்று பிரதமர் அறிவிப்பதாக தகவல் !

தேசிய ஊரடங்கு நீட்டிப்பை பற்றி இன்று பிரதமர் அறிவிப்பதாக தகவல் !

Share it if you like it

  • கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக, 21 நாள் தேசிய ஊரடங்கை பிரதமா் நரேந்திர மோடி மாா்ச் மாதம் 24-ஆம் தேதி இரவு அறிவித்தாா். இந்த ஊரடங்கு காலம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைய உள்ள நிலையில், கரோனா நோய்த்தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதனை கருத்தில் கொண்டு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும். இல்லையெனில் இதுவரை மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலனில்லாமல் போய்விடும் என்று பல்வேறு மாநில அரசுகள் மற்றும் துறைசாா் நிபுணா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
  • சில மாநிலங்கள் ஊரடங்கை அம்மாநில முதல்வர்களே நீட்டித்துள்ளனர். தமிழக அரசை பொருத்தவரை, ஊரடங்கை நீட்டிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், இதுதொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி வெளியிடும் அறிவிப்பை பின்பற்றி, செயல்படுவதென முடிவெடுத்துள்ளது.
  • இந்நிலையில், தேசிய ஊரடங்கை நீட்டிப்பது தொடா்பான அறிவிப்பை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Share it if you like it