தொடர் தோல்வியை சந்திக்கும் பி.கே.வின் மாஸ்டர் பிளான் அதிர்ச்சியில் திமுக…!

தொடர் தோல்வியை சந்திக்கும் பி.கே.வின் மாஸ்டர் பிளான் அதிர்ச்சியில் திமுக…!

Share it if you like it

கொரோனா தொற்றிற்கு நிவாரண நிதியாக வெறும் சொற்ப தொகையை மட்டுமே திமுக வழங்கியது. ஸ்டாலினுக்கு டியூசன் எடுக்கும் பீகார் வாத்தியார் பிரசாந் கிஷோருக்கு மட்டும் 380 கோடி ரூபாயை அள்ளி கொடுத்ததை இன்று வரை தமிழக மக்கள் மறக்கவில்லை என்பது நிதர்சனம்.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஒன்றிணைவோம் வா, டீ ஷர்ட் நாடகம், என்று பி.கே வகுத்து கொடுத்த திட்டங்கள் படுதோல்வியை சந்தித்தது மட்டுமில்லாமல் திமுக தலைவருக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருந்தது..

இதன் தொடர்ச்சியாக ஆன்லைன் மூலம் திமுகவிற்கு ஆட்கள் சேர்க்கும் படியான ஆலோசனையை வழங்கி இருந்தார் பி.கே… அந்த திட்டமும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறாமல் திமுகவை நெட்டிசன்கள், மீம்ஸ் கிரியேட்டர்கள், கிண்டல் செய்வதற்கான கன்டெண்ட்டாக மாறியதே திமுகவிற்கே பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

blank


Share it if you like it