நாத்திக நரிகளை அலற விட்ட ஆன்மிக சிங்கம்!

நாத்திக நரிகளை அலற விட்ட ஆன்மிக சிங்கம்!

Share it if you like it

பாவப்பட்ட இந்து மதத்தை, மட்டுமே தாக்கி தாக்கி, அதை நம்புகிற அப்பாவிகளிடம் ரேட்டு வாங்கி சொத்து சேர்க்கும். பெரிய மனிதர்களை நான் அறிவேன். அவர்கள் பேசுகிற நாத்திக வாதம், அவர்கள் குடும்பம் நடத்தும், வியாபாரம் என்பதை அறியாமல், வாழ்க்கையை இழந்து நிற்கும் பலரை நான் அறிவேன்.

பருவ காலத்தில் சருமத்தின் அழகு மினுமினுப் பதைப் போல. ஆரம்ப காலத்தில் இந்த வாதத்தைக் கேட்டு, ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். நடிகையின் மேக்கப்பை கண்டு ஏமாறுகிற, சராசரி மனிதனைப் போல அன்று, நாத்திக வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் அது எனக்கு குறுகிய கால கவர்ச்சியாக அமைந்தது இறைவனின் கருணை!

என்னை அடிமை கொண்ட கண்ணனும், ராமனும், இன்று சந்திர மண்டலத்துக்கு பயணம் போகும். அமெரிக்காவையே அடிமை கொண்டு, ஆன்மீக நெறியில் திளைக்க வைத்திருக்கிறார்கள். அமெரிக்காவை விடவா ஈரோடு பகுத்தறிவில் முன்னேறிவிட்டது? பணத்தறிவில் முன்னேறிவிட்டது, என்று வேண்டுமானால் சொல்லலாம்..

ஆளுங்கட்சியாக எது வந்தாலும் ஆதரித்து, தன் கட்சியும் உயிரோடு இருப்பதாக காட்டிக் கொண்டு. எது கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு, வாழ்க்கையை சுகமாக நடத்துவதற்கு, இந்த நாத்திக போலிகள், போட்டிருக்கும் திரைதான் பகுத்தறிவு .

உலகத்தில் நாத்திகம் பேசியவன், தோற்றதாக வரலாறு உண்டே தவிர, வென்றதாக இல்லவே இல்லை. நம்பிக்கை இல்லாதவன், கோவிலுக்கு போக வேண்டாம். ஆனால் நம்புகிறவனை தடுப்பதற்கு நீ யார்?

blank

அப்பாவி இந்துக்கள் பேசாமல், இருக்க இருக்க சமுதாய வியாபாரிகள், கோவிலுக்கு முன் கடை விரிக்க தொடங்குகிறார்கள். வெள்ளைக்காரனின் கால்களை கட்டிப்பிடித்துக் கொண்டு போகாதே போகாதே என் கணவா என்று பாடியவர்களுக்கு நாட்டுப்பற்று எங்கிருந்து வரும்?

நாட்டு பற்று இல்லாதவர்களுக்கு, தெய்வப் பற்று எங்கிருந்து வரும்? தெய்வப் பற்று இல்லாதவர்களுக்கு நாணயம், நேர்மை, இவற்றின் மீது நம்பிக்கை எங்கிருந்து வரும்?

நாலரை கோடி, தமிழர்களில் நீங்கள் சலித்துச் சலித்து எடுத்தாலும், நாலாயிரம் நாத்திகர்களை கூட காண முடியாது. பழைய நாத்திகர்களை எல்லாம், நான் பழனியிலும், திருப்பதியிலும், சந்தித்துக் கொண்டிருக்கிறேன். ஆன்மிக சிங்கம் நாத்திக நரிகளை பார்த்து கர்ஜித்த வார்த்தைகள்.


Share it if you like it