நெ.கண்ணனை கைது செய் -நாளை மெரினாவில் H.ராஜா தர்ணா!

நெ.கண்ணனை கைது செய் -நாளை மெரினாவில் H.ராஜா தர்ணா!

Share it if you like it

பட்டிமன்ற பேச்சாளரான நெல்லை கண்ணன் என்பவர் இஸ்லாமிய பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை தீர்த்து கட்டுங்கள் என்று வன்முறை தூண்டும் விதமாக பேசியுள்ளார்.அதுமட்டுமல்லாமல் இந்து கடவுளான ராமனை பற்றியும் விமர்சித்து பேசியுள்ளார்.இதனால் இந்துக்கள் கொதித்தெழுந்து நெல்லை கண்ணனை கைது செய்ய கோரி காவல் துறையில் புகார் அளித்தனர்.இந்தநிலையில் பாஜக- வை சேர்ந்த H.ராஜா அவர்கள் நெல்லை கண்ணனை கைது செய்ய கோரி நாளை மாலை 3 மணிக்கு சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே தர்ணா செய்ய போவதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அந்த தர்ணாவில் இல.கணேசன்,பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் C.P ராதாகிருஷ்ணன் அவர்களும் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.


Share it if you like it