நேபாளம் மீண்டும் ஹிந்து நாடாக அறிவிக்க வேண்டும் இஸ்லாமியர்கள் கோரிக்கை!

நேபாளம் மீண்டும் ஹிந்து நாடாக அறிவிக்க வேண்டும் இஸ்லாமியர்கள் கோரிக்கை!

Share it if you like it

கம்யூனிஸ்ட் ஆளும் நேபாள் நாட்டை  ஹிந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று இஸ்லாமியர்கள் அந்நாட்டிற்கு கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளனர். உலகிலேயே ஹிந்துக்கள் மட்டும் தான் மதச்சார்பற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இருந்தால் தான் இஸ்லாமியர்கள் என்ற அடையாளத்தோடு நாங்கள் நிம்மதியாக இந்நாட்டில் வாழ முடியும் என்று ராப்தி முஸ்லீம் சொசைட்டியின் தலைவர் அம்ஜத் அலி கூறியுள்ளார்.

அதேபோன்று சிபிஎன்-யுஎம்எல் சிஏ உறுப்பினர் அனார்கலி மியா, என் சொந்த அனுபவத்தில் இருந்து கூறுகிறேன். கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த மிஷனரிகள் இங்குள்ள ஹிந்துக்களை மதம் மாற்றி அடுத்தவர்களை தொந்தரவு செய்வது வருவது வேதனை அளிக்கிறது. இது ஹிந்து நாடாக இருந்தால் அனைத்து மதத்தினற்கும் பாதுகாப்பான உணர்வை வழங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

பல ஆண்டுகளாக நேபாள் ஹிந்து நாடாக தான் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு தான் அது கம்யூனிஸ்ட் நாடாக மாறியது. கம்யூனிஸ்ட் அரசின் கோர முகத்தை அந்நாட்டு மக்கள் வெகு விரைவில் உணர்ந்து கொண்டதால் அங்கு வாழும் சிறுப்பான்மையினர் மீண்டும் ஹிந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று இக்கோரிக்கையை முன் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it