நோய் தொற்று வேகமாக பரவி வரும் நேரத்திலும்…! மதப்பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட இஸ்லாமியர்கள்…!

நோய் தொற்று வேகமாக பரவி வரும் நேரத்திலும்…! மதப்பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட இஸ்லாமியர்கள்…!

Share it if you like it

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளின், வழிகாட்டுதல் படி மருத்துவர்கள், செவிலியர்கள், தீவிரமாக போராடி வருகின்றனர். அரசாங்கத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்காமல், தங்கள் விருப்ப படி செயல்படும் நபர்களால் நோய் தொற்று மேலும் பரப்பி வருதோடு மட்டுமில்லாமல். மாநில அரசு தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து கொண்டே செல்ல இவர்களும் முக்கிய காரணமாக உள்ளனர்.

இந்நிலையில் இந்து முன்னணியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் நாமக்கல் மாவட்டம்  பள்ளிபாளையத்தில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் குரான் புத்தகம் வைத்து  மதபிரச்சாரம் செய்தும் குழந்தைகளுக்கு மயில் இறகில் சிறகு அடித்து கொரனா நோய் தீர்ப்பதாக கூறி இந்துக்கள் பெரும்பான்மையினராக வாழ்கின்ற பகுதியில் மத பிரச்சாரம் செய்தனர்.

Image

தகவல் அறிந்து இந்து முன்னணியினர் உடனடியாக சென்று பொதுமக்கள் உதவியுடன் காவல்துறையிடம் வழக்கு பதியவும், அவர்களுக்கு நோய் தொற்று உள்ளதா என மருத்துவ பரிசோதனைகள் செய்யவும், வாகனத்தை பறிமுதல் செய்யவும் இந்து முன்னணி சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.

Image
இந்து முன்னணி நிர்வாகிகள்

Share it if you like it