பஞ்சமிநில விவகாரம் உதயநிதிக்கு நோட்டீஸ்

பஞ்சமிநில விவகாரம் உதயநிதிக்கு நோட்டீஸ்

Share it if you like it

தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் அலுவலகம் கோடம்பாக்கத்தில் உள்ளது. இது பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதாக எழுந்த  சர்ச்சையையடுத்து பா.ஜ.க மாநில செயலாளர் சீனிவாசன் தேசிய பட்டியலினர் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதனை தொடர்ந்து தேசிய பட்டியலின ஆணையம், முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் வரும் 19 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி நோட்டீஸ் அளித்துள்ளது. உதயநிதியிடம் ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை நடத்துவார் என கூறப்படுகின்றது. தொண்டர்களின் செயல்பாடுகளால்  சமூகவலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளான, தி.மு.கவிற்கு இது மேலும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.


Share it if you like it