ஷீலா ரஷீதின் முன்ஜாமீன் தள்ளுபடி, கைது செய்ய தடையில்லை..!

ஷீலா ரஷீதின் முன்ஜாமீன் தள்ளுபடி, கைது செய்ய தடையில்லை..!

Share it if you like it

சமூக வலைத்தளங்களில் இந்திய இராணுவம் குறித்து அவதூறுகளை பரப்பியதற்காக ஷீலா ரஷிதை கைது செய்யலாம் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஷீலா ரஷீத் தொடுத்த முன்ஜாமீன் மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. ஷீலா ரஷீத் டெல்லி ஜவர்ஹர்லால் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவராவார், இவர் JNUSU மாணவர் அமைப்பின் துணைத்தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 18 தேதி காஷ்மீரில் சூழல் சரியில்லை எனவும், இந்திய ராணுவம் சட்டத்திற்கு புறம்பாக நடப்பதாகவும் உண்மைக்கு புறம்பான தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை அப்போதே இந்திய இராணுவம் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it