பிரதமரின் ஊரடங்கு உத்தரவு – பாராட்டிய  கிரிக்கெட் வீரர் அஸ்வின் !

பிரதமரின் ஊரடங்கு உத்தரவு – பாராட்டிய கிரிக்கெட் வீரர் அஸ்வின் !

Share it if you like it

  • பிரதமர் மோடி மார்ச் 22 -ஐ சுய ஊரடங்கு உத்தரவை பின்பற்ற மக்களுக்கு கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கையின்படி மக்கள் யாரும் வெளியே வராமல், எல்லா சாலைகளிலும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. பிரதமரின் இந்த கோரிக்கைக்கு பல பிரபலங்களும்,அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
  • இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரரான அஸ்வின் ராமச்சந்திரன் என்பவர் பிரதமரின் ஊரடங்கு உத்தரவை பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அதில் தொடக்கத்தில் நம்பமுடியாத பிரதமரின் ஊரடங்கு உத்தரவிற்கு, நாம் பள்ளிகளில் அடிக்கடி கேள்விப்பட்ட வார்த்தையான பின் ட்ராப் சைலன்ஸ் எனப்படும் அளவிற்கு பெரும் வரவேற்பு தற்போது கிடைத்துள்ளது. இந்த நாளுக்கு அப்பாலும் இது நீடிக்கும் என்றும், சமூக தொலைதூரத்தை அடுத்த நாட்களிலும் பின்பற்ற முடியும் என்று நம்புகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த டுவீட்டை பலரும் ரீ-ட்வீட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it