போலி வீடியோ வெளியீடு -மாட்டிக்கொண்ட இம்ரான்கான்!

போலி வீடியோ வெளியீடு -மாட்டிக்கொண்ட இம்ரான்கான்!

Share it if you like it

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் உத்தரபிரதேசத்தில் முஸ்லிம்களை குறிவைத்து போலீஸ் வன்முறை நடத்துகிறது என்று கூறி ஒரு வீடியோவைப் பகிர்ந்து இருந்தார். அதற்கு அவர் “உ.பி.யில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான இந்திய காவல்துறையின் படுகொலை என தலைப்பிட்டு இருந்தார்.

ஆனால் அந்த வீடியோ வங்காளதேசத்தில் நடந்த வன்முறை வீடியோ. இதனால் ட்விட்டரில் இம்ரான்கானுக்கு எதிராக விமர்சனம் எழுந்தது. உடனடியாக அவரது ட்விட்டரில் இருந்து அந்த வீடியோ பதிவு நீக்கப்பட்டது.

இது உத்தரபிரதேசத்தில் நடந்தது அல்ல ஆனால் மே, 2013, வங்காளதேசத்தின் டாக்காவில் நடந்த ஒரு சம்பவம் ஆகும் என உத்தரப்பிரதேச காவல்துறை தனது ட்விட்டரில் தெரிவித்து உள்ளது.

இம்ரான்கானின் இந்த ட்விட்டிற்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.


Share it if you like it