ம(க)ருத்துவம்  நிறைந்த மருத மரம்!

ம(க)ருத்துவம் நிறைந்த மருத மரம்!

Share it if you like it

எப்போதும் பசுமையாகக் காட்சியளிக்கும் மருத மரம் மருத்துவ மரம் என்று அழைக்கப்படுகிறது. அளவற்ற மருத்துவ குணங்கள் பலவற்றைக் கொண்டது. என்று மருத மரத்தின் புகழ் பாடுகின்றனர் சித்தர்கள்..

மருத மரத்தில் இருந்து கிடைக்கும் மருதம் பட்டைக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு. இந்த மருதம் பட்டை சிறிது துவர்ப்பு சுவை உடையது.வைட்டமின் சி மருதம்பட்டையில் மிகுதியாக அடங்கி உள்ளது..

இதயத்தின் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படியாமல் தடுப்பதற்கு மருதம் பட்டையில் உள்ள வேதிப் பொருள் பயன்படுகிறது..இதில் லிப்பிட் பெர்ஆக்சிடேஷன் நிறைந்துள்ளதால் இரத்தம் உறைதலைத் தடுப்பதோடு இதயத் தசைகளை வலுவாக்கும் ஆற்றலும் இதன் பட்டைக்குண்டு..

இதன் பட்டையில் துவர்ப்புத் தன்மை கொண்ட இரசாயனப் பொருள் இருப்பதால் இதனை கஷாயமாகத் தயார் செய்து புண்களைக் கழுவினால் அவை விரைவில் குணமாகும்..மருதம் பட்டையை அரைத்துப் பொடியாகவும், மருதம் பட்டையை தண்ணீரில் ஊறவைத்து குடிநீராகவும் பயன்படுத்தலாம்..

மருதம் பட்டை உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியைத் தருகிறது. குடல் தொடர்பான எல்லா நோய்களுக்கும் இது சிறந்த மருந்து. மருதம் பட்டை குடிநீர் பயன்படுத்தினால் உடலில் ரத்தக்கொதிப்பு, இதய படபடப்பு, தூக்கமின்மை, நீரிழிவு பிரச்னை, கல்லீரல் பிரச்னை போன்றவைகள் கட்டுக்குள் வரும்..

ஆன்டி ஆக்சிடென்ட் என்ற புத்துணர்வு தரும் சக்தி மருதம்பட்டையில் அதிகமாக இருக்கிறது..கல்லீரல், நுரையீரல், மார்பு, வாயில் ஏற்படும் புற்றுநோய்கள் போன்றவைகளை வராமல் தடுக்கும் திறன் மருதம் பட்டைக்கு உண்டு..

மருதம் பட்டை – 200 கிராம், சீரகம் – 100 கிராம், சோம்பு – 100 கிராம், மஞ்சள் – 100 கிராம் அனைத்தையும் ஒன்றாக எடுத்து, நன்றாகப் பொடித்து தூள் செய்து வைத்திருந்து, தினமும் கொதிக்க வைத்த தண்ணீரில் 5 கிராம் அளவு தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் குணமடையும்..தூக்கமின்மை, மன உளைச்சல், படபடப்பு நீங்க மருதம் பட்டை தூளுடன் சிறிது கசகசா வறுத்து அரைத்து பாலில் கலந்து அருந்தினால் மாற்றத்தை உணர முடியும்..

ஹார்மோன் குறைபாடு, அதிக உதிரப்போக்கு, மாதவிடாய் போன்ற பிரச்னைகள் கொண்ட பெண்கள் மருதம் பட்டை கஷாயத்தைப் பயன்படுத்தலாம். மருதம் பட்டை – 100 கிராம் அளவிலும், சீரகம் – 25 கிராம் அளவிலும் சேர்த்து கொதிக்கவைத்து ஆறிய நிலையில் குடிநீராக தினமும் குடித்து வந்தால் இதயம் வலுவாகும். மன அழுத்தம் நீங்கி நல்ல தூக்கம் கிடைக்கும். இதன் மூலம் ரத்த குழாய்களில் கொழுப்பு அதிகமாக படிவதும் தடுக்கப்படும்..

சிறுநீரகத்தில் உருவான கல் கரைய, இதன் பட்டையை நன்கு வேக வைத்து வடிக்கட்டி பருக வேண்டும். சிறுநீரகத்திலுள்ள கல், சிறுநீர் வழியாக வெளியேறி விடும்.மருத மரத்தின் இலை, பூ, காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொதிக்க வைத்துக் குடிநீராக்கிக் குடித்தால், இரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்களின் அளவு அதிகரிக்கும்.. இலையை அரைத்துப் பாலில் கலந்து இரு வேளை தொடர்ந்து குடித்தால் பித்த வெடிப்புகள் நீங்கும்..சில ஆலயங்களில் தல விருஷ்சமாகவும் சங்க இலக்கியங்களில் இதனை பற்றிய பாடல்களை நாம் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it