மதுரை மீனாட்சியம்மனை இழிவுப்படுத்திய கம்யூ, தி.க ஆதரவாளர்கள் இந்து முன்னணி போராட்டத்தால் அதிரடி கைது!

மதுரை மீனாட்சியம்மனை இழிவுப்படுத்திய கம்யூ, தி.க ஆதரவாளர்கள் இந்து முன்னணி போராட்டத்தால் அதிரடி கைது!

Share it if you like it

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தி.க. திமுக, பல சில்லறை கட்சிகள், அடிபொடி இயக்கங்கள் என்று ஹிந்து கடவுள்கள் மீதும், அவர்களின் வழிபாட்டு முறைகள் மீதும் தொடர்ந்து தாக்குதல் நிகழ்த்தி வருகின்றனர்.

உலகம் முழுவதும் உள்ள பக்தர்களால் போற்றி வணங்கப்படும் மதுரை மீனாட்சி அம்மன் திருகல்யாணத்தை பற்றி முகநூலில் தி.க, கம்யூனிஸ கொள்கை, பிடிப்பு கொண்ட மனோகரன், பிரபாகரன், ஆகியோர்  மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து பதிவிட்டு இருந்தனர். அவர்கள் இருவரையும் உடனே கைது செய்ய வேண்டும் என்று

blank

திண்டுக்கல் தாலுக்கா காவல் நிலையத்தை, இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் மூன்று அடி இடைவெளி விட்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராடினர்.

இதனை அடுத்து தலைமறைவாக இருந்த மனோகரனை புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மற்றொரு குற்றவாளியான பிரபாகரனை இன்று இரவுக்குள் கைது செய்வதாக காவல்துறையினர் இந்து முன்னணி பொறுப்பாளர்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it