மத்திய அரசின் கொரோனா  நிதிக்கு பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.25 கோடி அளித்துள்ளார் !

மத்திய அரசின் கொரோனா நிதிக்கு பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.25 கோடி அளித்துள்ளார் !

Share it if you like it

கொரோனாவை தடுப்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி 144 தடையை செயல்படுத்தினார். இந்நிலையில் மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய உபகரணங்களின் பற்றாக்குறைகள் அதிகம் உள்ளன. மேலும் பல மாநிலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசிடம் நிதி கேட்டு வந்துள்ளன. எனவே பிரதமர் மோடி மத்திய அரசின் வங்கி கணக்கை பதிவிட்டு நம் நாட்டின் நலனுக்காக நிதி கொடுக்க முன் வருபவர்கள் நிதி அளிக்கலாம் என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமரின் கோரிக்கையை ஏற்று பலரும் தன்னால் முடிந்த நிதியை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் பாலிவுட் நடிகரான அக்‌ஷய் குமார் ரூ.25 கோடியை மத்திய அரசின் கொரோனா நிதிக்கு அளிப்பதாக தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். திரை பிரபலங்களில் 25 கோடி அளித்துள்ளது இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it