முஸ்லீம் லீக் ஆம்புலன்சில் போதைப்பொருள் கடத்தல் !

முஸ்லீம் லீக் ஆம்புலன்சில் போதைப்பொருள் கடத்தல் !

Share it if you like it

  •  கேரள மாநிலம் காசர்கோடு கும்பலே வழியாக முஸ்லீம் லீக் ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கர்நாடகா கேரளா எல்லைப்பகுதியில் அந்த ஆம்புலன்ஸை கேரளா போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி ஆம்புலன்ஸை ஓட்டி வந்த ஓட்டுனரிடம் விசாரித்தனர். விசாரித்தபொழுது முன்னுக்கு பின்னாக முரணாக பதிலளித்ததால், ஆம்புலன்ஸை போலீசார் சோதனை செய்தனர்.
  • போலீசார் நடத்திய சோதனையில் ஆம்புலன்சில் மூட்டை மூட்டையாக இருந்த போதை மருந்து கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தான் போலீசாரிடம் மாட்டிக்கொண்ட பயத்தினால் தப்பிப்பதற்காக உடனடியாக அந்த நபர் தனது கைபேசியை எடுத்து ஒரு இஸ்லாமிய நபருக்கு போன் செய்து “என்னடா வண்டி புல்லா போதைப்பொருள் இருக்கு, என்கிட்ட நீ இதைப்பத்தி சொல்லவேயில்லை’ என்று பேசிவிட்டு போலீசாரிடம் ‘புடிச்சி அவனை ஜெயில்ல போடுங்க சார்’ என்று சாமர்த்தியமாக கூறியுள்ளார். போலீசார் அந்த ஆம்புலன்ஸை பறிமுதல் செய்து அந்த நபரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share it if you like it