மேட்டுப்பாளையம் மதமாற்றம் – முதலில் எச்சரித்த மீடியான்!

மேட்டுப்பாளையம் மதமாற்றம் – முதலில் எச்சரித்த மீடியான்!

Share it if you like it

மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர் கிராமத்தில் சுவர் இடிந்து 17 பேர் இறந்தது தொடர்பாக,உரிய நடவடிக்கை எடுக்காததால் 430 ஹிந்துக்கள் முஸ்லிமாக மதம் மாறியதாக சில ஊடகங்கள் சமீபத்தில் செய்திகள் வெளியிட்டன.

அங்குள்ள ஹிந்து அமைப்புகள் மற்றும் நமது மீடியான் [Mediyaan] அன்பர்கள் மூலம் கிடைத்த தகவலின் படி, அங்கு யாரும் மதம் மாறவில்லை என்று மீடியான் செய்தி வெளியிட்டது.

இதனையடுத்து டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் தி இந்து நாளிதள்களும் நடூர் கிராமத்தில் யாரும் மதம் மாறவில்லை என்று செய்தி வெளியிட்டது.

430 பேர் மதம் மாறியதாக கடந்த சில நாட்களுக்கு முன் வந்த செய்திகள் பொய் என்று முதலில் தெரிவித்த மீடியானின் கூற்று இன்று நிரூபணமாகியுள்ளது. தமிழ்புலிகள் கட்சியின் தலைவரே கூட தங்கள் தொண்டர்கள் மட்டுமே மதம் மாறியுள்ளார்கள் என தெரிவித்துள்ளார். ஹிந்து மதத்தில் மரியாதை இல்லை என்பதால் மதம் மாறினார்கள் என்று முதலில் செய்தி வந்தது, ஆனால் மதம் மாறியுள்ள 12 பேர் தங்கள் பிரமான பத்திரத்தில் “ஹிந்து மதத்தின் மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை. மாறாக முஸ்லீம் மதத்தை நாங்கள் விருப்பப்பட்டு மாறுகிறோம்” என்று தான் தெரிவித்துள்ளார்கள்.

எனவே இந்த 12 பேருமே கூட, ஹிந்து மதத்தில் எந்த பிரச்சனையும் சந்திக்கவில்லை என்று தான் பொருள். இஸ்லாம் மதத்துக்கு விருப்பப்பட்டு மாறினோம் என்று கூறுகிறார்கள்.


Share it if you like it