ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு..! நிரூபிக்க  முடியுமா? காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆவேசம்..!

ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு..! நிரூபிக்க முடியுமா? காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆவேசம்..!

Share it if you like it

ராகுல் காந்தியின் கருத்து, அரசியல் முதிர்ச்சி, போன்றவை நாட்டின் இறையாண்மைக்கு எதிராக சில நேரங்களில் அமைந்து விடுகிறது. சி.ஏ.ஏ மற்றும் 370-வது சட்ட பிரிவை குறித்து ராகுல், தெரிவித்து இருந்த கருத்தை. ஆதாரமாக ஜ.நா சபை வரை தூக்கி கொண்டு பாகிஸ்தான் ஓடியதற்கு. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களே தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

ராகுல் காந்தியின் டுவிட்டர் பதிவுகள், பேட்டிகள், மக்கள் மத்தியில் நாளுக்கு, நாள் அதிர்ச்சியையும், குழப்பத்தையும், ஏற்படுத்தும் விதமாக இன்று வரை இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் தற்பொழுது நடைபெற்று வருகிறது. சில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், பாஜகவின் ஆதரவாளர்கள் போல் செயல்படுவதாக, பகிரங்க குற்றச்சாட்டை ராகுல் காந்தி, அக்கூட்டத்தில் முன் வைத்ததாக கூறப்படுகிறது.

பாஜகவுடன் நான் தொடர்பில் இருந்தேன் என்று நிரூபித்து விட்டால். அரசியலை விட்டு விலகத் தயார். கடந்த 30 வருடங்களாக காங்கிரஸ் கட்சிக்காக விசுவாசமாக பணியாற்றி வருகிறேன். இந்த 30 வருடங்களில் பாஜகவிற்கு சாதகமான எந்த ஒரு கருத்தையும் நான் தெரிவித்தது இல்லை என்று கபில் சிபல். தனது விளக்கத்தை காங்கிரஸ் கட்சிக்கு தெரிவித்து இருப்பது. அக்கட்சியினரிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it