அயோத்தி ராமர் கோவிலை அழிக்க நினைத்த ISIS வெளியான பகீர் தகவல்..!

அயோத்தி ராமர் கோவிலை அழிக்க நினைத்த ISIS வெளியான பகீர் தகவல்..!

Share it if you like it

முந்தைய காங்கிரஸ் அரசு போல் மெத்தனமாக இல்லாமல். நாட்டின் பாதுகாப்பில் பாரதப் பிரதமர் மோடி, தலைமையிலான அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது என்பதை அனைவரும் நன்கு உணர்ந்துள்ளனர். கடந்த ஓராண்டாக, காஷ்மீர் பகுதியில் குண்டுவெடிப்புகளும் கிடையாது. தாக்குதல்களும் இல்லை என்பது சற்று ஆறுதலான விஷயம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு. ப.சிதம்பரம் அண்மையில் தெரிவித்து இருந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

உள்நாட்டு சதி, வெளிநாட்டு சதி, என்று அனைத்து தரப்புகளின் முயற்சிகளையும். உளவுத்துறை கொடுக்கும் தகவல் மூலம் இந்திய அரசு மிகவும் சிறப்பாக முறியடித்து வருகிறது. இந்நிலையில் தீவிர இஸ்லாமிய அடிப்படை பயங்கரவாதி அபு யூசுப் சதி செயல் குறித்து கிடைத்த. தகவல் அடிப்படையில், அவனது வீட்டில் நடத்திய அதிரடி சோதனையில். 30 கிலோ வெடி மருந்து பொருட்கள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் கொடியையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

அயோத்தி ராமர் கோவிலை  வெடிகுண்டு வைத்து தகர்ப்பதை நோக்கமாக கொண்டவன் இவன் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருப்பது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it