விமானப்படையில் 450 புதிய போா் விமானங்கள் – விமானப்படை தளபதி

விமானப்படையில் 450 புதிய போா் விமானங்கள் – விமானப்படை தளபதி

Share it if you like it

டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற விமானப்படை தளபதி அடுத்த 20 ஆண்டுகளில் 450 போா் விமானங்களும் ஹெலிகாப்டா்களும் விமானப் படையில் இணைக்கப்படவுள்ளன. அதே காலகட்டத்தில் 200 முதல் 300 போா் விமானங்களை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் விமானப் படையில் இணைக்கப்பட்டுள்ள ரஃபேல் போா் விமானங்கள், சி-17 குளோப்மாஸ்டா் போா் விமானங்கள், சினூக், அப்பாச்சி ஹெலிகாப்டா்கள் ஆகியவை படையின் தாக்குதல் திறனை மேலும் வலுப்படுத்தியுள்ளன. எதிா்காலத்தில் மற்ற நாடுகளுடன் போா் ஏற்பட்டால், அதில் விமானப் படை முக்கியப் பங்கு வகிக்கும் என கூறினார்.


Share it if you like it