என்கவுன்டரில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை !

என்கவுன்டரில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை !

Share it if you like it

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூரில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

இது குறித்து பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறியதாவது: துப்பாக்கிச் சண்டை நிறுத்தப்பட்டதை அடுத்து, ஒரு பெண் உட்பட 6 நக்சலைட்டுகளின் உடல்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன. அப்பகுதியில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் பஸ்தார் லோக்சபா தொகுதியில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.


Share it if you like it