ஆபாச வீடியோ பாதிரியார்: அலேக்காக தூக்கிய போலீஸ்!

ஆபாச வீடியோ பாதிரியார்: அலேக்காக தூக்கிய போலீஸ்!

Share it if you like it

தலைமறைவாக இருந்த ஆபாச வீடியோ பாதிரியார் பெனடிக்ட் ஆன்ட்ரோவை, போலீஸார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உல்ள பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பெனடிக் ஆன்ட்ரோ. இவர், பிலாங்காலை பகுதியிலுள்ள தேவாலயத்தில் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார். தேவாலயத்தில் பாவமன்னிப்பு வழங்கும் இவர், பல்வேறு பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. மேலும், பாதிரியார் பெனடிக்ட், பல பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில், ஆலந்தட்டுவிளையைச் சேர்ந்த பெண் ஒருவர், பாதிரியார் பெனடிக்ட் ஆன்ட்ரோ இளம்பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் கூறி கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.யைச் சந்தித்து புகார் அளித்தார். அப்போது, பாதிரியார் தொடர்பான ஆபாச வீடியோ பதிவுகளையும் அவர் போலீஸாரிடம் ஒப்படைத்தார். இதனடிப்படையில் நாகர்கோவில் சைபர் க்ரைம் போலீஸார் பாதிரியார் பெனடிக் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

தவிர, பாதிரியார் பெனடிக்ட் ஆன்ட்ரோ மீது ஆன்லைன் மற்றும் காவல் நிலையங்களில் 5 பெண்கள் புகார் அளித்தனர். இதையறிந்த பாதிரியார் பெனடிக் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, 2 தனிப்படை அமைக்கப்பட்டு பாதிரியாரை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். இதனிடையே, அமைச்சர் ஒருவர் உதவியுடன் பாதிரியார் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில், தனிப்படை போலீஸார் பல்வேறு இடங்களில் தேடிவந்த நிலையில், நாகர்கோவிலில் உள்ள பண்ணை வீட்டில் தலைமறைவாக இருந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்ட்ரோவை இன்று கைது செய்தனர்.


Share it if you like it