முதல்நபராக தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றிய நடிகர் அஜித்குமார் !

முதல்நபராக தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றிய நடிகர் அஜித்குமார் !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உட்பட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் இன்று காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தமாக 6 கோடியே 23 லட்சம் வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர்.

இதில் முதல் முறை வாக்காளர்கள் 10 லட்சத்து 92 ஆயிரம் பேரும், ஆண் வாக்காளர்களில் 3 கோடியே 6 லட்சம் பேரும், பெண் வாக்காளர்களில் 3 கோடியே 17 லட்சம் பேரும், மாற்றுப் பாலினத்தவர்களில் 8 ஆயிரத்து 467 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், முதல் நபராக வாக்களிப்பதற்காகவே, தென் சென்னைக்கு உட்பட்ட திருவான்மையூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடிகர் அஜித் குமார் காலை 6.45 மணி அளவில் வந்தடைந்திருந்தார்.

காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், முதல்நபராக தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார் நடிகர் அஜித்குமார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *