விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நிர்வாகி படுகொலை – இந்து முன்னணி கண்டனம் !

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நிர்வாகி படுகொலை – இந்து முன்னணி கண்டனம் !

Share it if you like it

சண்டிகரில் ஹிந்து அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நிர்வாகி ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டதாக இந்து முன்னணி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில்,

சண்டிகர் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நிர்வாகி படுகொலை.
ஐ எஸ் ஐ எஸ் அமைப்பின் கொலைவெறி தாக்குதல்.

ரூப் நகர் ரயில் நிலையத்தில் கடை நடத்தி வந்தவர் விகாஸ் பக்கான் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவராக இருந்துள்ளார்.

ஏப்ரல் 13ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையை விசாரித்த போலீசார், மந்திப் குமார் மற்றும் சுரேந்திர குமார் ஆகியோரை விசாரித்ததில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது

பஞ்சாபின் நவ ஷோரா பகுதியைச் சேர்ந்த ஒருவர் வேலை தேடிச் சென்றுள்ளார். ஐஎஸ்ஐஎஸ் ஆட்கள் வலையில் சிக்கியுள்ளார். பஞ்சாப் திரும்பிய அவர் போதைக்கு அடிமையாகிய இளைஞர்களை இழுக்கவும் கொலை சம்பவத்தில் ஈடுபட வைக்கவும் முயற்சித்துள்ளார்

விகாஸ் பக்கா கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளுக்கு ரூபாய் 70 ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது

இந்தக் கொலைக்கு மூளையாக செயல்பட்டது பாகிஸ்தானில் செயல்படும் பாபர் கர்ஷா இன்டர்நேஷனல் அமைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

தேசத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தேச நலனுக்காக உழைப்பவர்களை அடையாளம் கண்டு படுகொலை செய்வதை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *