டிக்கெட் எடுக்காமல் ஓசி விசிட்… கருத்து கந்தசாமி குடும்பத்தை பொளந்து கட்டிய நெட்டிசன்கள்!

டிக்கெட் எடுக்காமல் ஓசி விசிட்… கருத்து கந்தசாமி குடும்பத்தை பொளந்து கட்டிய நெட்டிசன்கள்!

Share it if you like it

டிக்கெட் எடுக்காமல் அரசு அருங்காட்சியகத்தை ஓசியில் சுற்றி பார்த்த நடிகர் சூர்யாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

சிவகங்கையில் புதிதாக திறக்கப்பட்ட கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா, தந்தை சிவகுமார், மனைவி ஜோதிகா மற்றும் அவரது பிள்ளைகளுடன் சென்று சுற்றி பார்த்தார். அவர்களுடன், மதுரை எம்.பி. வெங்கடேசனும் உடன் இருந்தார். இந்த நிலையில், காலை பத்து மணிக்கு திறக்க வேண்டிய அருங்காட்சியகம் நடிகரின் குடும்பத்திற்காக ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே திறக்கப்பட்டன.

இதையடுத்து, அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்து விட்டு நடிகரின் குடும்பம் அங்கிருந்து புறப்பட்டுள்ளது. சூர்யாவின், குடும்பத்திற்காக பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கருத்து கூறும் நடிகரை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.


Share it if you like it