பா.ஜ.க.வின் மீது அவதூறு… தி.மு.க.விற்கு குவியும் கண்டனம்!

பா.ஜ.க.வின் மீது அவதூறு… தி.மு.க.விற்கு குவியும் கண்டனம்!

Share it if you like it

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறித்து, தி.மு.க. அவதூறு செய்தி பரப்பி வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இவரது, வருகைக்கு பின்பு அக்கட்சி வேகமாக முன்னேறி வருகிறது. இதன் காரணமாக, இளைஞர்கள் மத்தியில் பா.ஜ.க.விற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, மாற்று கட்சியை சேர்ந்தவர்களும் பா.ஜ.க.வை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

பா.ஜ.க.வின் அசுர வளர்ச்சி, தி.மு.க.விற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதே பல்வேறு அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. இதனை, பொறுத்துக் கொள்ள முடியாமல், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறித்து தி.மு.க. தொடர்ந்து அவதூறு பிரச்சாரங்களை செய்து வருகின்றன.

இப்படிப்பட்ட சூழலில், ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் பா.ஜ.க.விற்கு தொடர்பு இருப்பதாக தி.மு.க. பொய் செய்தி பரப்பி வருகிறது. இதற்கு, வலுசேர்க்கும் வகையில் அதன் அடிமை ஊடகங்களும் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it