தி.மு.க. தலைவருக்கு அண்ணாமலை எழுதிய சூப்பர் மடல்!

தி.மு.க. தலைவருக்கு அண்ணாமலை எழுதிய சூப்பர் மடல்!

Share it if you like it

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து, பாரதப் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் என அனைவரும் ஹிந்துக்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து இருக்கின்றனர். ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் வழக்கம் போல ஹிந்துக்களை புறக்கணித்து இருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழலில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலினுக்கு தனது ட்விட்டர் வாயிலாக அனுப்பிய வாழ்த்து மடல். அதில், கூறப்பட்டு இருப்பதாவது;

விசேஷ நாட்களில் ‘வாழ்த்து’ சொல்வது என்பது தமிழர் மரபின் ஓர் அங்கம். ஒருவொருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்ள வாழ்த்துகள் சொல்வது தொன்று தொட்டு கடைபிடித்து வரும் ஓர் வழக்கம். முழு மனதுடன் ஆட்சியாளர்கள் பகிரும் வாழ்த்து செய்தி அந்த மக்களின் மத நம்பிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம் என்பதை குறிக்கிறது. இப்படிப்பட்ட வாழ்த்துக்களை கூறுவதிலும் அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுவது சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும். அதிலும் குறிப்பிட்ட ஒரு சமூகம் கொண்டாடும் பண்டிகைக்கு மட்டுமே வாழ்த்து கூறாமல் இருப்பது ஆட்சியாளர்களுக்கு அழகல்ல.

தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்து பண்டிகைகளுக்கு சென்ற ஆண்டும் வாழ்த்து சொல்லவில்லை. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லுவார் என்று எதிர்பார்த்த மக்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே. தி.மு.க. தலைவராக நீங்கள் வாழத்து சொல்வதும் சொல்லாமல் இருப்பதும் கொள்கை ரீதியில் அது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம் ஆனால் இப்போதோ நீங்கள் அனைத்து தரப்பினராலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரஜை. கிறிஸ்தவ இஸ்லாமிய சகோதர சகோதரிகள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லும் நீங்கள் இந்துக்களின் பண்டிகைகளின் போது வாழத்துகள் சொல்லாமல் இருப்பது ஏற்புடையதல்ல. தி.முக.வில். 90% சதவீத உறுப்பினர்கள் இந்துக்களே என்று சொல்லும் நீங்கள், உங்கள் வாழ்த்துச் செய்தி அவர்களையும் சென்றடையும் என்பதற்காகவாது நீங்கள் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்தலாமே.

தமிழகத்தில் பெருவாரியாக கொண்டாடும் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறாமல் இருப்பது அந்த மக்களை ஒதுக்குவது போன்ற செயலாகும். என்பதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உணருவர் என்பதே எங்கள் நம்பிக்கை. அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்


Share it if you like it