ஆதிவாசிகளிடம் தொடர் கொள்ளை: முஸ்லீம் வாலிபர்கள் அடித்துக் கொலை!

ஆதிவாசிகளிடம் தொடர் கொள்ளை: முஸ்லீம் வாலிபர்கள் அடித்துக் கொலை!

Share it if you like it

பீகாரில் ஆதிவாதிகளிடம் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த முஸ்லீம் வாலிபர்கள் இருவரை, அடித்தே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவிலேயே மிகவும் நலிவடைந்த மாநிலமாகக் கருதப்படுவது பீகார். இன்னும் பண்ணையார் ஆதிக்கம் அதிகம் இருக்கும் அம்மாநிலத்தில், ஆதிவாசிகளும் கணிசமான அளவில் வசித்து வருகின்றனர். இந்த சூழலில், அதே பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய வாலிபர்கள் முகமது ஜலாலுதீன், ஜுல்பிகுர் மியான் ஆகியோர், ஆதிவாதி மக்களிடம் தொடர்ந்து கொள்ளையடித்து வந்திருக்கிறார்கள். அதாவது, ஆதிவாசிகள் வேட்டைக்கு சென்றிருக்கும் சமயத்தில், அவர்களது வீடுகளுக்குள் புகுந்து இருக்கும் பொருட்களை கொள்ளையடித்து வந்திருக்கிறார்கள்.

இதனால் ஆத்திரமடைந்த ஆதிவாசிகள், கொள்ளையர்களை பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி, நேற்று முன்தினம் சிலர் வேட்டைக்குச் சென்று, சிலர் வீடுகளிலேயே இருந்து விட்டனர். இதையறியாத ஜலாலுதீனும், ஜுல்பிகுரும் வழக்கம்போல தங்களது கைவரிசையைக் காட்ட வந்திருக்கிறார்கள். அப்போது, வீடுகளில் இருந்த ஆதிவாசிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து அங்கிருந்து மரத்தில் கட்டி வைத்து விட்டார்கள். பின்னர், வேட்டைக்குச் சென்றிருந்த ஆதிவாசிகள் நள்ளிரவுக்கு மேல் வீடு திரும்பி இருக்கிறார்கள்.

கொள்ளையர்கள் இருவரும் கையும் களவுமாகச் சிக்கி இருப்பதைப் பார்த்த அவர்கள், கையில் இருந்த வேல் கம்புகளால், இருவரையும் குத்திக் கொலை செய்திருக்கிறார்கள். இருவரும் கொலை செய்யப்பட்ட தகவல் மறுநாள் காலையில்தான், போலீஸாருக்குத் தெரியவந்திருக்கிறது. பின்னர், ஆதிவாதிகள் கிராமத்துக்குச் சென்ற போலீஸார், ஜலாலுதீன், ஜுல்பிகுர் ஆகியோரின் சடலங்களை மீட்டனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Share it if you like it