ஏப்ரல் 19-ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை !

ஏப்ரல் 19-ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை !

Share it if you like it

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிக்கும் வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் தேசிய கட்சியான பாஜக, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளான தமாகா, பாமக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடத்துவதற்கு மிகப் பெரிய சவால் என்று சொல்லும்படியாக ஏதும் இல்லை.

தேர்தல் ஆணையம் எல்லாவற்றிற்கும் தயாராக உள்ளது. இதனால், தேர்தலில் எந்தவித குளறுபடிகளும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை.

வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19-ம் தேதி அன்று, தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் அனைத்தும் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கும் என்றார்.


Share it if you like it