ஏ.ஆர். இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு காவல்துறையின் தோல்வியே காரணம் என எடப்பாடி பழனி சாமி குற்றம்சாட்டியுள்ளார். செப்டம்பம் மாதத்தில் மட்டுமே இதுவரை 40-க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் திமுக ஆட்சியில் உளவுத்துறை செயலிழந்து விட்டதாகவும் விமர்சித்தார். துப்பாக்கிக்கலாச்சாரம், கள்ளச்சாரய மரணம், போதை பொருளில் சிக்கியுள்ள இளைஞர்கள் என்ற நிலையில் தமிழகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்