காஷ்மீரில் ஹிந்துக்களை குறி வைத்து கொலை செய்யும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு பஜ்ரங்தள் அழைப்பு..!

காஷ்மீரில் ஹிந்துக்களை குறி வைத்து கொலை செய்யும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு பஜ்ரங்தள் அழைப்பு..!

Share it if you like it

பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அடிப்படை பயங்கரவாதிகள் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்களால் அங்கு வசிக்கும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல்கள், அட்டூழியங்கள், நிகழ்த்தப்படுகிறதோ அதே போன்று சம்பவத்தை ஜம்மு காஷ்மீரில் உள்ள அடிப்படைவாதிகள் ( பிரிவு 370 & 35 A நீக்கப்பட்ட பின்பு) ஹிந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இக்கொடிய செயலை கண்டித்து பஜ்ரங்தள் சார்பாக நாடு தழுவிய அளவில் 9-10-2021 அன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் உருவ பொம்மைகளை எரித்து ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஒன்றியங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், பாரதம் முழுவதும் காஷ்மீர் இந்துக்களுக்கு பக்க பலமாக இருக்கும் என்பதே பஜ்ரங்தள் வழங்கும் முக்கிய செய்தி ஆகும். அனைத்து ஹிந்து சொந்தங்களும் அவசியம் அந்தந்த மாவட்ட ஒன்றியங்களில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற வேண்டும் என்று அதன் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.


Share it if you like it

One thought on “காஷ்மீரில் ஹிந்துக்களை குறி வைத்து கொலை செய்யும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு பஜ்ரங்தள் அழைப்பு..!

Comments are closed.